ரணிலுடனான சந்திப்பு - தமிழரசுக் கட்சியின் நிலைப்பாடு வெளியானது
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ள விடயம் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு இன்று வவுனியாவில் வவுனியா குடியிருப்பு பிரதேச கலாசார மண்டபத்தில் கூடியது.
கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் கூடிய மத்திய குழுவில் தற்கால அரசியல் சூழலில் தமிழ் கட்சிகளின் வகிபாகம், அதிபருடன் இடம்பெறவுள்ள தமிழ் கட்சிகளின் சந்திப்பு உட்பட கட்சி விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டிருந்தது.
கட்சியின் உடைய நிலைப்பாடு
இதில் தற்போது ஆரம்பமாகவுள்ளதாகக் கூறப்படும் அரசியல் அமைப்பு விடயங்கள் கட்சியின் உடைய நிலைப்பாடு தொடர்பில் ஆராயப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் மாற்றி அமைக்கப்பட்டமை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை அரசியல் தீர்வு விடயத்தில் ஏற்கனவே தமிழ் தேசிய கட்சிகளோடு பேசி, அபகரிக்கப்பட்டுள்ள காணிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், தொடர்ச்சியான நில ஆக்கிரமிப்புக்கள் நிறுத்தப்படவேண்டும், காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் நிறுத்தப்படவேண்டும்.
தற்போது அரசியலமைப்பிலும் சட்டங்களிலும் உள்ள அதிகார பகிர்வு விடயங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு மாகாணசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
வடக்கு கிழக்கில் அர்த்தமுள்ள அதிகார பகிர்வு முறையில் சமஸ்டி கட்டமைப்பில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற 3 விடயங்களையும் சமாந்தரமாக முன்கொண்டு செல்வதென தீர்மானித்து அரசாங்கத்திற்கு முன் வைத்துள்ளதாக சுமந்திரன் குறிப்பிட்டார்.
சில கால எல்லைகளுக்குள் இவை நடந்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் கூறினார்.
அரசியல் கைதிகள் விவகாரம்
அரசியல் கைதிகள் 32 பேர் இருப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அதில் அதிபரின் மன்னிப்பில் விடுதலை செய்யப்படக்கூடியவர்கள் எவரும் இல்லை என்ற கருத்தும் கூறப்பட்டதாக அவர் கூறினார்.
எனினும் அதிபர் அதனை மீள் பரிசீலனை செய்யுமாறு தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி மற்றும் சிக்கல்நிலை குறித்து சுமந்திரனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது,
திருகோணமலையில் ஏற்பட்டுள்ள பலவித சிக்கல்களை கையாள்வதற்கு ஒரு பொறிமுறை அவசியம் என்ற அடிப்படையில் சம்பந்தனுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றது.
நானும் மாவை சேனாதிராஜாவும் சம்பந்தரை சந்தித்து கலந்துரையாடினோம். அவர் அதனை வெவ்வேறு விதத்தில் கையாள்வதாக கூறியிருக்கின்றார். எனவே அவ் விடயங்கள் கையாளப்படும் என நம்புகின்றோம் என சுமந்திரன் கூறியுள்ளார்.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
