யாழில் துவிச்சக்கர வண்டியில் சென்றவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
Jaffna
Jaffna Teaching Hospital
Death
By Kajinthan
யாழில் (Jaffna) வீதியில் துவிச்சக்கர வண்டியில் சென்ற நபர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த சம்பவம் நேற்று (21.11.2025) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
வட்டு வடக்கு, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த கணேசமூர்த்தி நாகேந்திரம் (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் மரண விசாரணை
இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபர் இன்று பிற்பகல் கேணியடி, பிளவத்தை பகுதிக்கு செல்வதற்காக துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தார்.

இதன்போது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இறக்கைகள் வெட்டப்பட்ட நிலையில் கலகம் செய்வாரா பிமல்..!
3 நாட்கள் முன்
மத்தள விமான நிலையத்தை குறி வைக்கும் அமெரிக்கா
1 வாரம் முன்
மரண அறிவித்தல்