தலைமன்னார் கடற்பரப்பில் மில்லியன் கணக்கில் சிக்கிய போதைப் பொருள்கள்!
தலைமன்னார் கடற்கரைப் பகுதியில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது சுமார் 9.914 கிலோகிராம் 'ஐஸ்' போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது என சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது.
இந்த சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் நால்வரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்..
அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகு ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 79 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
கடத்தல் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் பகுதியைச் சேர்ந்த 28 முதல் 37 வயதுடைய என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதைப்பொருட்கள் மற்றும் படகுகள் என்பவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறிலங்கா சுதந்திர தினத்தில் தமிழரின் நெஞ்சை உருக்கும் போராட்டம்… 1 மணி நேரம் முன்