மக்களோடு மக்களாக நின்று தடுப்பூசியை பெற்ற அமைச்சரின் மனைவி
srilanka
corona
minister
wife
By Sumithiran
இலங்கையில் அமைச்சர் ஒருவரின் மனைவி மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து தடுப்பூசியை பெற்றுள்ளார்.
இவ்வாறு அவர் மக்களுடன் நிற்கும் புகைப்படம் சமுக வலைத்தளத்தில் வைரலாகியிருக்கிறது. துறைமுக இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீரவின் மனைவியே இவ்வாறு தடுப்பூசியை பெற்றவராவார்.
அவர் கொழும்பு – மாளிகாவத்தை சிறிசேன விளையாட்டு மைதானத்திற்கு அருகிலுள்ள தடுப்பூசி நிலையத்தில் காத்திருந்தமை தெரியவந்துள்ளது.
இதேவேளை அவர் சதொச நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் என்றும் தினமும் பொதுமக்களுடன் இணைந்தே ரயிலில் பயணம் செய்கின்றார் எனவும் தெரியவருகின்றது.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி