323 கொள்கலன்கள் விவகாரம்! விசாரணை குழுவில் இருந்து விலகிய அமைச்சர்
கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீக ஆய்வு இல்லாமல் விடுவித்தது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற சிறப்புக் குழுவில் இருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக விலகி உள்ளார்.
துறைமுக அமைச்சராக இருந்து கொண்டே இந்த விசாரணையில் அவர் பங்கேற்பது சர்ச்சைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவர் தனது உறுப்பினர் பதவியை விட்டு விலகியுள்ளதாக கூறப்படுகிறது.
அவர் அந்தப் பதவியில் இருக்கும்போது விசாரணையை நடத்துவது நியாயமற்றது என்று அனைத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களும் சுட்டிக்காட்டியதாக முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
மாற்று உறுப்பினர்
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழு, இந்த விவகாரத்தை ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக அதன் மூன்றாவது அமர்வுக்காக 11 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் கூடியது.

இதன்படி, அமைச்சர் கருணாதிலக குழுவிலிருந்து விலகியதாகவும், மாற்று உறுப்பினர் நியமிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கூட்டத்தில், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, சுனில் வட்டகல மற்றும் அர்கம் இல்யாஸ், மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜெயசேகர, அஜித் பி. பெரேரா, டி.வி. சானக, முஜிபுர் ரகுமான், நஜித் இந்திக மற்றும் லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் பயங்கரம்: வீதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி மற்றும் மனைவி - களத்தில் குதிக்கும் CID
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |