இந்தியாவிற்கு அச்சப்பட்டு விலகியதா இலங்கை - விளக்கும் பாதுகாப்பு அமைச்சு
பாகிஸ்தான் (Pakistan) கடற்படையினருடனான போர்ப்பயிற்சி கைவிடப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எதுவித உண்மையும் இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சிடம் (Ministry of Defance) ஊடகம் வினவிய போது உண்மைக்கு புறம்பான செய்தி என அமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்திய (India) அழுத்தம் காரணமாக இலங்கையில் நடைபெறவிருந்த பாகிஸ்தான் கடற்படையினருடனான போர்ப்பயிற்சியொன்று கைவிடப்பட்டுள்ளதாக நேற்றையதினம் (19) இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
எதுவித உண்மையும் இல்லை
எனினும், பாகிஸ்தானிய போர்க்கப்பல் இலங்கையின் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை தந்து இருநாட்டு கடற்படையினரும் போர்ப்பயிற்சிகளை மேற்கொண்ட பின் கடந்த மார்ச் 06ம் திகதி இங்கிருந்து புறப்பட்டுச் சென்றுவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு விளக்கமளித்துள்ளது.
எனவே, போர்ப் பயிற்சிகள் கைவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் பாதுகாப்பு அமைச்சு தெளிவுப்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
