புடைவைக்கடையில் பணியாற்றிய எட்டுப்பேருக்கு கொரோனா - உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை
srilanka
covid19
monaragala
By Vasanth
மொனராகலை நகரப்பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றில் பணியாற்றிய எட்டுப் பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நகரத்தில் உள்ள அனைத்து கடைகளையும் மூடுவதற்கு மொனராகலை பிரதேச சபை மற்றும் மொனராகலை வர்த்தகர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
நகரப்பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணியாற்றுவோருக்கு பி சி ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த முடிவு வரும் வரை கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மொனராகலை பிரதேசசபைத் தலைவர் ஆர்.எம். ஜெயசிங்க தெரிவித்தார்.
எனினும் மொனராலையில் எந்தவொரு பாடசாலையும் மூடப்படவில்லை எனவும் நகரத்தைச்சுற்றி தனிமைப்படுத்தல் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி