சந்திரனை நெருங்கும் ஆபத்து: நாசாவுக்கே அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா!
'சிட்டி கில்லர்' என அழைக்கப்படும் 2024 YR4 என்ற விண்கல் நிலவை தாக்கவுள்ளதாக விண்வெளி ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
குறித்த மோதல் மூலம் நிலவின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்களை நுட்பமாக ஆய்வு செய்யும் திட்டத்தையும் விஞ்ஞானிகள் முன்னெடுத்துள்ளனர்.
அமெரிக்க எடுத்த தீர்மானம்
இந்த நிலையில், இவ்வாறான விண்வெளி அபாயங்களை முன்கூட்டியே கணிக்க, விண்வெளி ஆய்வுகள் தொடர வேண்டியது அவசியமான வேளையில், நாசாவுக்கான நிதியை அமெரிக்க அரசு குறைக்க திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 2025ம் ஆண்டுக்கான நிதியளவில், தேவையான தொகையின் பாதி மட்டுமே ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த விண்கல் சுமார் 10 மாடி கட்டிட அளவு கொண்டது. அதன் தாக்கம் நிலவின் மேற்பரப்பில் சிறிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
நிதி ஒதுக்கீடு
இதேவேளை, அதன் தாக்கம் பூமி வாழ்வில் நேரடி பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு குறைவாகவே உள்ளது.
எனினும், 2028ல் இந்த விண்கல் மீண்டும் பூமிக்கு அருகில் வர இருக்கிறது. 2032ல் நிலவை தாக்கும் சாத்தியம் அதிகம் என கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில், 2025ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டில் நாசாவுக்கு தேவையான தொகையின் பாதி மட்டுமே ஒதுக்கப்படும் என்ற அமெரிக்க அரசின் தீர்மானத்தை சமூக ஊடகங்களில் மக்கள் கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
