பாரிய தீ விபத்து - 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் எரிந்து நாசம்
தனி நபருக்கு சொந்தமான பனை மரத்தோப்பில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்தி செற்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து நேற்று தலைமன்னார் காவல்துறை பிரிவில் உள்ள கட்டுக்காரன் குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள பருத்திப்பண்ணை கிராமத்திற்கு அருகில் ஏற்பட்டுள்ளது.
இந்தத் தீ விபத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட பனை மரங்கள் சேதத்திற்கு உள்ளாகி உள்ளன.
பாரிய சேதங்கள்
தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர தலை மன்னார் காவல் நிலைய காவல்துறையினர் செல்வேரி ராணுவ முகாமில் உள்ள இராணுவத்தினர், தலைமன்னார் கடற்படை , மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து தீயணைப்புத் துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் இணைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

குறித்த தீ நேற்று செவ்வாய்க்கிழமை (31) மாலை 4 மணியளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
குறித்த தீ விபத்தில் உயிர் சேதமோ, வீடுகளுக்கோ அல்லது சொத்துக்களுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை.
எனினும் பனை மரங்களுக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகள் - ஜோசப் நயன்


| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
4 நாட்கள் முன்