306 பேர் கைது! இன்று நீங்கள் வீட்டை விட்டு வெளியேற வாய்ப்பில்லை - அஜித் ரோஹண
police
sri lanka
people
ajith rohana
By Shalini
கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 306 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடக செய்தித் தொடர்பாளர் பிரதிப் பொலிஸ்மா அஜித் ரோஹன இதை தெரிவித்தார்.
இதற்கிடையில், போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்றும் நடைமுறையில் உள்ளன. நாளை அதிகாலை 4 மணிக்கே இது நீக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
எனினும் இன்று தேசிய அடையாள அட்டை எண் முறையைப் பயன்படுத்தவோ அல்லது வீட்டை விட்டு வெளியேறவோ வாய்ப்பில்லை.
நாளை அதிகாலை 4 மணி முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை அடையாள எண் முறையின்படி வீட்டை விட்டு வெளியேற உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
நீங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு வாடிக்கையாளர் இடத்திற்கு மட்டுமே பயணிக்க முடியும் என்றும் தெரிவித்தார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி