குடும்பத்துடன் பிரித்தானியா திரும்பிய தாய் - விமானத்தில் உயிர் பிரிந்த துயரம்
United Kingdom
Accident
Hong Kong
Death
By Sumithiran
விமானத்தில் தூங்கிக் கொண்டு இருக்கும் போதே உயிரிழந்த தாய்
ஹொங்கொங்கில் இருந்து பிரித்தானியாவிற்கு பறந்து கொண்டு இருந்த விமானத்தில் பயணித்த ஹெலன் சில மணி நேரங்களுக்கு பின்னர் எத்தகைய பதிலும் அளிக்காமல் அமைதியாக காணப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இறந்த தாயாரின் உடலின் அருகில் அமர்ந்து வந்த பிள்ளைகள்
இதில் துயரம் என்னவென்றால் ஹெலன் தூக்கத்தில் உயிரிழந்த பின்னரும் மீதமுள்ள எட்டு மணி நேர விமானப் பயணத்தில், ஹெலனின் குழந்தைகள் இறந்த தாயாரின் உடலின் அருகில் அமர்ந்து வந்ததுதான்.
விமானத்தில் இருந்து ஹெலனின் உடல் ஜெர்மன் நகரத்தில் வெளியேற்றப்பட்ட நிலையில், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் தங்களது பிரித்தானிய பயணத்தை அதே விமானத்தில் தொடர்ந்தனர்.
இந்தநிலையில் துக்கத்தில் இருக்கும் குடும்பத்திற்கு உதவுவதற்காக ஜெய்ன் ஜெஜே என்ற நபர் நிதி திரட்டல் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி