பூநகரியில் கோர விபத்து: இளம் குடும்பஸ்தர் பரிதாப மரணம்
கிளிநொச்சி (Kilinochchi) - பரந்தன் (Parantan) பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளும் கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (06) காலை இடம்பெற்றுள்ளது.
பிரேத பரிசோதனை
பரந்தன் பகுதியில் இருந்து பூநகரி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் கிளிநொச்சி கோனாவில் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில், உயிரிழந்த குடும்பஸ்தரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த விபத்தில் கப் ரக வாகனததில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பூநகரி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |