ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் தொடர்பில் முல்லைத்தீவு நீதிமன்றம் விடுத்துள்ள அறிவிப்பு!
ரவிகரன், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வர் மீதான வழக்குவிசாரணை கொவிட் - 19 அசாதராண சூழ்நிலையால் பெப்ரவரிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பெப்பிரவரி மாதம் முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் மக்களுக்கு சொந்தமான 617 ஏக்கர் காணியினை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோட்டாபாய கடற்படை முகாமிற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டதற்காக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டது.
இது தொடர்பான விசாரணை நடத்துவதற்காக நேற்று 12.10.2021 திகதியிடப்பட்டிருந்தது. எனினும் கொவிட்-19 ஆசாதாரண சூழ்நிலை காரணமாக முல்லைத்தீவு நீதிமன்றால் வழக்கு விசாரணைகள் எடுத்துக்கொள்ளப்படாத நிலையில், எதிர்வரும் 2022 பெப்ரவரி மாதம் 08ஆம் திகதிக்கு வழக்கின் விசாரணைகள் திகதியிடப்பட்டுள்ளன.