முள்ளிவாய்க்கால் 17 ஆம் ஆண்டு நினைவு நாள்: தமிழ் சிவில் சமூக அமையம் வெளியிட்ட அறிக்கை
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
நினைவுகளே எங்கள் பேராயுதம் தமிழ்த் தேசிய உணர்வே எங்கள் பலம் என்ற தொனியில் குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
குறித்த அறிக்கையில், 2009 இல் முள்ளிவாய்க்காலில் 146,679 பேர் படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள் கடந்தும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மே 18 அன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரித்தல், சுடரேற்றி அஞ்சலி செலுத்துதல், குருதிக்கொடை வழங்குதல் மற்றும் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாத்தல் போன்ற பணிகளை முன்னெடுக்குமாறும் அமையம் கோரியுள்ளது.
மேலும் தற்போதைய அரசாங்கமும் தமிழ் தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எந்தவொரு முற்போக்கான நகர்வுகளையும் முன்னெடுக்கவில்லை என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |