“மே 18” நினைவுகூர்வதை நிறுத்தப் போவதில்லை - மாவை திட்டவட்டம்

mavai mullivaikkal memorial tna
By Vanan May 15, 2021 08:35 AM GMT
Report

இராணுவம் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அழித்தாலும் நாம் நினைவுகூர்வதை நிறுத்தப் போவதில்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவு துாபி உடைக்கப்பட்டமை குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே இதனை அவர் குறிப்பிட்டிருந்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

மே 18 நாளை போரில் உயிரிழந்த மக்கள் நினைவு நாளாக அனுசரித்து வருகிறார்கள் முள்ளிவாய்க்காலில் ஒரு இடத்தினை தெரிவு செய்து அந்த இடத்தில் ஒரு நினைவிடத்தை தயார் செய்து மே மாதம் 18ஆம் திகதி அந்த நினைவு நாளை உயிர்களைபறி கொடுத்தவர்கள் தங்களுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

ஒவ்வொரு வருடமும் இந்த நிகழ்வு வழமைபோல் இடம்பெற்று வருகின்றது. இம்முறையும் அவ்வாறான ஒரு நிகழ்ச்சிக்கான ஒழுங்குகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


அதனை விட ஒரு நிரந்தரமான நடுகல் ஒன்றும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நடுவதற்கும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுத்திருந்ததை நாங்கள் அறிந்திருக்கின்றோம்.

ஆனால் கடந்த 12ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் அந்தப் பகுதியில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு ஏற்கனவே இருந்த நினைவுச்சின்னங்களின் மேற்பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலாக பெரிய எடைகொண்ட நடுகல் ஒன்று நாட்டுவதற்காக வைக்கப்பட்டு இருந்த போதிலும் அதனை திருடிச் செல்லப்பட்டு விட்டது. அது தற்போது எங்கே இருக்கின்றது என தெரியவில்லை.

எனினும் இவ்வருட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை தற்போதுள்ள கொரோனா நிலைமையினை அனுசரித்து சுகாதாரப் பிரிவினரின் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொண்டு மிக அவதானமாக அதனை செயற்படுத்துவதற்கு தயாராக இருக்கிறோம்.

ஏற்கனவே போரினால் உயிரிழந்தது போல் வடக்கில் அவ்வாறான நிலை மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருக்கின்றோம்.

எனவே இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை வழமை போன்று நாம் அனைவரும் ஒன்றுபட்டு நினைவு கூருவோம். அத்தோடு முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நினைவு கூர ஆயர்கள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளமை தமிழ் தேச மக்களுக்கு ஒரு எழுச்சி மிக்கதாக காணப்படுகின்றது.

எனவே தற்போதுள்ள நிலைமையை அனுசரித்து முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வினை நடாத்துவோம் என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023