முற்றியது தகராறு - ஒருவர் சுட்டுக் கொலை
Police
Murder
Men
Kurunegala
SriLanka
Air Rifles
Pothuwila
By Chanakyan
பொல்பிதிகம - மதஹபொலயாய - பொத்துவில பிரதேசத்திலுள்ள வாயு துப்பாக்கியால் (Air Rifles) ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொல்பிதிகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் வாரியபொல பிரதேசத்தை சேர்ந்தவர் என்றும் கொலையின் பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக மேலும் தெரியவந்துள்ளது.
இக் கொலை சம்பவம் தொடர்பில் பொல்பிதிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்