24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Police Investigation
By Raghav Jul 13, 2024 10:11 AM GMT
Report

கடந்த 24மணி நேரத்தில் நாட்டில் நடைபெற்ற 03 கொலைகள் தொடர்பில் காவல்துறை ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நேற்று (12) அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இந்த கொலைகள் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் கடந்த (12) ஆம் திகதி காலை பொதுப்பிட்டிய ரம்புக, பின்னகொடெல்ல பிரதேசத்தில் ஒரு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வீடொன்றுக்கு அருகில் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்துள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

யாழ்ப்பாணத்தில் மாமியாரை தாக்கிய மருமகள் கைது : வைரலாகும் காணொளி

பிரேரணை

குறித்த நபர் அயல் வீட்டில் வசித்த பெண்ணிடம் தகாத முயற்சியை மேற்கொண்டதால் குறித்த பெண்ணின் கணவர் மேலும் இருவர் குறித்த நபரை தடியால் அடித்து கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரபுக்க, ரக்வான பிரதேசத்தில் வசிக்கும் 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சந்தேகநபர்கள் 28 மற்றும் 35 வயதுடையவர்கள் எனவும் அதே பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டடுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொத்துப்பிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெளியாகியது பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்

வெளியாகியது பொதுத் தகவல் தொழில்நுட்ப பரீட்சை முடிவுகள்


தென்னை வியாபாரி 

இதேவேளை, நேற்று (12) இரவு, ரத்கம, ரணபனாதெனிய பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

ரத்கம பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த நபர் தென்னை வியாபாரி எனவும், வெளிநாட்டில் உள்ள தனது இளைய சகோதரரின் மூடிய வீட்டில் வசித்து வந்த நிலையில், அவரை யாரோ தேங்காய் உரிக்கும் கருவியால் குத்தியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணமோ அல்லது கொலையை செய்தவர்களோ இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிவையில் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

கடந்த 40 நாளில் 7 முறை பாம்பு கடிக்கு உள்ளான இளைஞன்: தேடி வந்து கடிக்கும் வினோதம்

மூன்றாவது கொலை

மூன்றாவது கொலைச் சம்பவம் நேற்று (12) இரவு கல்நேவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கலங்குட்டிய சந்தனகம வீதியில் இருந்து கல்நேவ கலாஓயா வீதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நேற்று (12) இரவு தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 மணிநேரத்தில் மூவர் படுகொலை : இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள் | Murders Have Been Reported The Police Media Unit

அதன்படி விசாரணைகளின் போது சந்தனகம கலங்குட்டிய பிரதேசத்தை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குடும்ப தகராறு காரணமாக இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்நேவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

வசந்தவின் உடலை எட்டி கூட பார்க்காத பிரபலங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, Scarborough, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நாவற்குழி, Moratuwa

01 Oct, 2023
மரண அறிவித்தல்

Balangoda, நல்லூர், கொழும்பு, London, United Kingdom

15 Sep, 2024
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Zürich, Switzerland

18 Sep, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

குப்பிளான், London, United Kingdom

01 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, செங்கலடி, Harrow, United Kingdom

13 Sep, 2024
மரண அறிவித்தல்

நாவலடி ஊரிக்காடு, Munich, Germany

12 Sep, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Hamm, Germany

14 Sep, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கேகாலை, யாழ்ப்பாணம், Herning, Denmark, Toronto, Canada

19 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Zürich, Switzerland

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, நுணாவில் மேற்கு

16 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

ஊரெழு, நீர்வேலி

17 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தரோடை, Eastham, United Kingdom

13 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, நியூஸ்லாந்து, New Zealand

18 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், பரந்தன் குமரபுரம், திருச்சி, India

01 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை பெரியவிளான், Markham, Canada

19 Sep, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இளவாலை, Markham, Canada, கோண்டாவில்

15 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மானிப்பாய், தொல்புரம், London, United Kingdom

12 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கொழும்பு 13, Pinner, United Kingdom

09 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
கண்ணீர் அஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

08 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, கொடிகாமம், மெல்போன், Australia

15 Aug, 2024