யாழ் முத்தமிழ் விழா - இனிதே ஆரம்பம்
யாழ்பாண மாநகர சபையின் முத்தழிழ் விழா இன்றைய தினம்(29) 4.30 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.
ஐ.பி. சி தமிழின் அணுசரனையின் கீழ் துர்க்காதேவி மணி மண்டபத்தில் யாழ் மாநகர சபயின் ஆணையாளர் இ. த. ஜெயசீலன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றுக்கொண்டுள்ளது.
இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுனர் திருமதி பி.எஸ். எம் சார்ள்ஸ், சிறப்பு விருந்தினர்களாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் ஆகியோர் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
விருதுகள் வழங்கி கௌரவிப்பு

இந்நிகழ்வில், யாழ் மாநகர சபையின் கலைத்துறைக்கு வழங்கும் உயரிய விருதான "அரசகேசரி" விருது வழங்கப்படவுள்ளது.
இவ்வகையில் இயல் துறைக்காக கலாபூஷணம் கோகிலா மகேந்திரன், இசைத்துறைக்கு கலாபூஷணம் எம். பி. பாலகிருஷ்ணன், நாடகத்துறைக்கு கலாபூஷணம் கீர்த்தி சாந்தினி சிவநேசன் ஆகியோருக்கு அரசகேசரி விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் பலருக்கு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளதோடு தொடர்ந்து கலை கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

















