மாறப்போகும் MV Touska குழுவின் தலைவிதி! அமெரிக்கா அரசாங்கத்தின் சொத்தாக ஈரானிய கப்பல்
ஈரானிய துறைமுகங்களுக்கான அமெரிக்க முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற, ஈரான் கொடி ஏற்றப்பட்ட MV Touska என்ற சரக்குக் கப்பலை , அமெரிக்க இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தி கைப்பற்றியதாக அமெரிக்க மத்திய கட்டளை மையம் (சென்ட்காம்) தெரிவித்தது.
இப்போது கப்பலுக்கு என்ன ஆகும்? என்ற கேள்விகள் அதிகரித்துள்ளன.
இதில் Touska கப்பல் ஆய்வுக்காக நங்கூரமிடும் இடத்திற்கோ அல்லது துறைமுகத்திற்கோ கொண்டு செல்லப்படும் என்று கடற்படை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்திற்கு பரிசு
குறித்த நடவடிக்கை முடிந்ததும், அதில் என்ன இருக்கிறது என்பதை உறுதிசெய்தால், அது இறுதியில் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஒரு “பரிசாக” சொத்தாக மாறக்கூடும் என்று அமெரிக்க படைகளை மேற்கோள் காட்டி கடற்படை நிபுணர்கள் விபரித்துள்ளனர்.

"கடற்படைப் போர்ச் சட்டங்களின்படி, இதுபோன்ற சூழ்நிலைகளில் முற்றுகையை மீறிச் செல்ல முயன்ற ஒரு கப்பலை கைப்பற்றலாம்," என அவுஸ்திரேலிய கடற்படையின் முன்னாள் அதிகாரி கூறியுள்ள பின்னணியில் இது தொடர்பிலான அச்சநிலைகள் கூறியுள்ளன.
MarineTraffic தரவுகளின்படி, MV Touska கப்பலானது சமீபத்திய ஆண்டுகளில் சீனாவின் ஜுஹாய் நகரத்திற்கும் பல்வேறு ஈரானிய துறைமுகங்களுக்கும் இடையே முன்னும் பின்னுமாகச் சென்று வந்ததோடு, 2018 முதல் அது மீது தடை விதிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் MV Touska கப்பல் பொருட்களுடன் இருப்பதாக MarineTraffic கூறியுள்ளது. ஆனால் அதில் உள்ள பொருட்கள் என்ன என்பதை MarineTraffic அமைப்பு துல்லியமாகக் குறிப்பிடவில்லை.
போர்க் கொள்ளைப் பொருள்
எனினும் அமெரிக்கா அதை நீண்ட காலத்திற்குத் தன்னிடமே வைத்துக்கொள்ள முடிவு செய்தால், அதனை நீதிமன்றத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என கூறியுள்ளது.

ஆயுத மோதலின் போது எதிரிப் போராளி அல்லது எதிரியிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களைப் போலவே, இதையும் போர்க் கொள்ளைப் பொருளாக கருதலாம், என்று எதிரிவுகூறப்பட்டுள்ளது.
MV Touska கப்பல் குழுவினரின் தலைவிதியைப் பொறுத்தவரை, அது அவர்களின் தேசிய இனங்களைப் பொறுத்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், அவர்களில் இந்திய அல்லது பிலிப்பைன்ஸ் மாலுமிகளாக இருந்திருந்தால், கப்பல் குழுவினர் கப்பலிலிருந்து இறக்கப்பட்டு, அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டிருப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
அத்தோடு, பணியாளர்கள் ஈரானியர்களாக இருந்தால், அவர்கள் தடுத்து வைக்கப்படலாம், அல்லது ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கப்பலில் இருந்தால், அவர்கள் போர்க் கைதிகளாகப் பிடித்து வைக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக MV Touska ஈரானுக்காக ஏதேனும் ஆயுதங்களையோ போர்க்கருவிகளையோ ஏற்றிச் சென்றிருந்தால், அதன் குழுவினர் தடுத்து வைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பணியாளர்களின் தேசியம் மற்றும் கப்பலின் நிலை குறித்து சென்ட்கோமின் கருத்துக்கள் வெளிவரலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |