''மலையக மாற்றம் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்'':ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

Sri Lanka Upcountry People Ceylon Workers Congress Jeevan Thondaman Central Province
By Shadhu Shanker Nov 18, 2023 12:55 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

''விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்துக்கொண்டு, மற்றையவர்களை தாழ்த்திபேசி காலத்தை வீணடிப்பதைவிட, மலையக மாற்றம் பற்றியே நான் சிந்தித்துக்கொண்டிருக்கின்றேன்'' என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

நுவரெலியா - நானுஓயா, கிளாரண்டன் தோட்டத்தில் தற்காலிக குடில்களில் வசித்த குடும்பங்களுக்கு, குடிநீர், மின்சாரம், உட்கட்டமைப்பு உட்பட சகல வசதிகளுடன் கூடிய தனி வீடுகள் அமைச்சர்  ஜீவன் தொண்டமானால் இன்று (18.11.2023) வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், அவர்களுக்கு பிரத்தியேக 'முகவரி' வழங்கப்பட்டு, வீடுகளுக்கு முன் வைப்பதற்கான கடித பெட்டியும் வழங்கப்பட்டது.

உலக கிண்ண இறுதிப்போட்டியால் பல மடங்கு அதிகரித்த கட்டணங்கள்

உலக கிண்ண இறுதிப்போட்டியால் பல மடங்கு அதிகரித்த கட்டணங்கள்

நிதி இல்லை

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

" மலையகத்தில் வீடு கட்ட முடியாது, வீடு கட்டுவதற்கு நிதி இல்லை என்றெல்லாம் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இவற்றுக்கு பதிலளிப்பதற்கு நாம் செல்லவில்லை. தனிநபர்களையும் விமர்சிக்கவில்லை. மாறாக செயலில் இறங்கினோம். அதன்பலனாகவே இன்று வீடுகளை கையளிக்க முடிந்துள்ளது. நுவரெலியா மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலின்போது எனக்கு அமோக ஆதரவை வழங்கினர்.

எனவே, மக்கள் நலன்கருதி, அனைத்து மலையக கட்சிகளையும் ஒன்றிணைக்க முயற்சித்தேன். நல்லெண்ணத்துடன் செயற்பட்டேன். அதற்கான சிறந்த ஆரம்பத்தையும் வழங்கினேன்.

இலங்கையர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசின் திட்டம்! தென்னிலங்கையில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் - முடங்கியது போக்குவரத்து(படங்கள்)

இலங்கையர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் அரசின் திட்டம்! தென்னிலங்கையில் ஒன்றுதிரண்ட போராட்டக்காரர்கள் - முடங்கியது போக்குவரத்து(படங்கள்)

மலையகம் 200 

ஆனால் நேரில் ஒன்றையும், வெளியில் சென்று மற்றுமொன்றையும் பேசுபவர்கள்தான் இருக்கின்றனர். மலையகம் 200 நிகழ்வு குறித்து விமர்சனங்களை முன்வைத்து, தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல்களை பெறுவதற்கு மலையக சார்ந்த நபரொருவர் விண்ணப்பம் முன்வைத்துள்ளார். இதனை வரவேற்கின்றேன்.

நல்ல விசயம். ஆனால் அதே ஊடகர் ஏன் வீட்டு திட்டம் பற்றி தகவல் அறியும் சட்டம் ஊடாக தகவல் பெறவில்லை? அதிலும் அரசியல் நடக்கின்றது. நிறைய பேர் காசுக்கு விலைபோய் உள்ளனர்.

நாம் மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தவில்லை. எதிர்வரும் 25 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எனது உரை உள்ளது. அதன்போது நாம் 200 நிகழ்வு தொடர்பில் விளக்கமளிப்பேன்.

காணி உரிமை

கடும் சவால்கள், போராட்டங்களுக்கு மத்தியிலேயே காணி உரிமையை பெற்றுக்கொடுத்துள்ளோம்.பழைய விடயங்களை வைத்து எனக்கு ஆதரவு வழங்க வேண்டியதில்லை.

இப்போது என்ன செய்கின்றோம் என சிந்தித்து பாருங்கள், அதற்கான பொறுப்பு இளைஞர்களுக்கு உள்ளது. மக்களுக்கு பிரச்சினை என்றால் நாம் வருகின்றோம், நெருக்கடியான சூழ்நிலையிலும் இந்த வீட்டு திட்டத்தை நிறைவு செய்துள்ளோம்.

எமக்கு ஒரு லட்சத்து 76 ஆயிரம் வீடுகள் தேவைப்படுகின்றன. 10 ஆயிரம் வீடுகள்தான் தற்போது எம்வசம் உள்ளன. எனவேதான் காணி உரிமையை பெறுவதற்கான நடவடிக்கையில் இறங்கி, அதனை முன்னெடுத்துவருகின்றோம்.

இந்திய வீடமைப்பு திட்டம் 

காணி உரிமை வழங்குவதற்கு பாதீட்டில் 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

காணி உரிமையை வழங்குவதற்கு இந்நிதி போதுமானது. சிலருக்கு தமது வீடுகளை தாமே நிர்மாணித்துக்கொள்ளகூடிய பொருளாதார பலம் உள்ளது, மேலும் சிலருக்கு வங்கி கடன் வாங்கி வீடுகளை நிர்மாணிக்க முடியும்.

வறுமை கோட்டின்கீழ் வாழ்பவர்களுக்குதான் இந்திய வீடமைப்பு திட்டம் வழங்கப்படும்.

அப்போதுதான் அனைவருக்கும் வீடுகளை பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும். " - என்றார்.

விடுதலைப் புலிகளின் காலத்தில் நடித்த பிரபல நடிகர் ஏரம்பு உயிரிழப்பு!(படங்கள்)

விடுதலைப் புலிகளின் காலத்தில் நடித்த பிரபல நடிகர் ஏரம்பு உயிரிழப்பு!(படங்கள்)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 




ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர்

08 Jan, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
9ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025