முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி

Sri Lankan Tamils Tamils Rajiv Gandhi Sri Lanka India
By Shadhu Shanker May 11, 2024 04:51 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கில் விடுதலையான நளினி(Nalini) தனது கணவர் முருகனை(Murugan) காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ளார்.

நளினியின் கணவர் முருகன் தற்போது கிளிநொச்சி(Kilinochi) – பளையில் வசித்து வருகிறார்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏராளமான தமிழ்நாட்டு தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் கைது செய்யப்பட்டனர்.

அதிகரித்த வெப்பநிலை: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

அதிகரித்த வெப்பநிலை: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ராஜீவ் காந்தி கொலை வழக்கு

இந்நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அந்த தண்டனை ஆயுள் தண்டனையாகவும் குறைக்கப்பட்டது.

முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி | Nalini Visit Kilinochchi Rajiv Gandhi Murder

அதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற சட்டப் போராட்டங்களுக்குப் பின்னர் ஆயுள் தண்டனை அனுபவித்த பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய தமிழ்நாட்டு தமிழர்களும் முருகன், சாந்தன்,(Santhan) ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகிய இலங்கைத் தமிழர்களும் கடந்த 2022ம் ஆண்டின் நவம்பர் மாதம் 11ம் திகதி விடுதலை செய்யப்பட்டனர்.

அதேசமயம் ஈழத் தமிழர்களான முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ் ஆகியோர் வெளிநாட்டவர் என்பதால் திருச்சி(Thiruchi) சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்தனர்.

நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு

நிரம்பி வழிந்த அரங்குகள்: வெளிநாடுகளில் ஊழி திரைப்படத்திற்கு கிடைத்த வரவேற்பு

சாந்தன் மரணம்

இந்த 4 பேரையும் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பான வழக்குகளும் நடைபெற்றிருந்த நிலையில் இவ்வழக்கு விசாரணையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சாந்தன், இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட இருந்த நிலையில் உயிரிழந்தார்.

முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி | Nalini Visit Kilinochchi Rajiv Gandhi Murder

இதனையடுத்து ராபர்ட் பயஸ், ஜெயக்குமார்(Jeyakumar) மற்றும் முருகன் ஆகியோரை இலங்கைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்கான ஆவணங்களையும் இலங்கை தூதரகம் வழங்கியிருந்ததோடு கடந்த ஏப்ரல் 03ஆம் திகதி, ராபர்ட் பயஸ் முருகன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இலங்கையை வந்தடைந்தனர்.

ஐபிஎல் வீரர் வியாஸ்காந்தின் பெற்றோர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

ஐபிஎல் வீரர் வியாஸ்காந்தின் பெற்றோர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு

 நளினியின் வருகை

தற்போது முருகன் தற்போது கிளிநொச்சி – பளையில் வசித்து வருகிறார். இந்த நிலையில் அவரது மனைவியும், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான இந்தியப் பெண்ணுமான நளினி தனது கணவரை பார்ப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

முருகனை காண கிளிநொச்சிக்கு வருகை தந்துள்ள நளினி | Nalini Visit Kilinochchi Rajiv Gandhi Murder

முருகன் மற்றும் நளினி ஆகியோர் மிக விரைவில் லண்டனில் இருக்கும் தங்கள் மகளிடம் சென்று மீண்டும் சேர்ந்து வாழ்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இணுவில், நவாலி தெற்கு, Scarborough, Canada

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Roermond, Netherlands

21 Oct, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, மானிப்பாய், Toronto, Canada

31 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024