திருநல்லூர்த் திருப்புகழ் வெளியீட்டு நிகழ்வும் இசை அர்ப்பணமும்
திருநல்லூர்த் திருப்புகழ்
திரு.தவ.தயேந்திரன் அவர்களால் ஆக்கப்பட்ட திருநல்லூர்த் திருப்புகழ் இசைத்தொகுப்பு வெளியீட்டு விழாவும் இசை அர்ப்பண நிகழ்வும் சனிக்கிழமை(30) நல்லூர் துர்காமணிமண்டபத்தில் பி.ப 4.00 மணியளவில் இடம் பெறவுள்ளது.
இந் நிகழ்வுக்கு சிவபூமி அறக்கட்டளையின் தலைவர், செஞ்சொற் செல்வர், கலாநிதி, ஆறு திருமுருகன் அவர்கள் தலைமையேற்கவுள்ளார்.
மேலும்,யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர், கலாநிதி, சிறீ சற்குணராஜா அவர்கள் திருநல்லூர்த் திருப்புகழ் இசைத்தொகுப்பை வெளியீடு செய்துவைக்க , யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், பேராசிரியர், கலாநிதி என் சண்முகலிங்கன் திருப்புகழ் நூலை வெளியீடு செய்துவைக்கவுள்ளார்.
குறித்த திருப்புகழ் நூலின் முதற்பிரதியை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர், வாழ்நாள் பேராசிரியர், கலாநிதி, பொன். பாலசுந்தரம்பிள்ளை பெற்றுக்கொள்ள, சிறப்பு பிரதியை யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் பெற்றுக்கொள்கின்றார்.
இதனையடுத்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் வழங்கும் திருப்புகழ் இசையர்ப்பணம் இடம் பெறவுள்ளது.