சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது பயனற்ற விடயம் விபிஎன் பயன்படுத்துகிறேன் - நாமல் தெரிவிப்பு!
sri lanka
Namal Rajapaksa
VPN
social media ban
By Thavathevan
இலங்கையில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டது பயனற்ற ஒரு விடயம் என்று இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ள நிலையில் விபிஎன் செயலியைப் பயன்படுத்தி டுவிட்டர் தளத்தில் அவர் இந்தப் பதிவினை வெளியிட்டுள்ளார்.
குறித்த டுவிட்டர் பதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
சமூக ஊடகங்களைத் தடுப்பதை நான் ஒருபோதும் மன்னிக்க மாட்டேன். ஆயினும், வி.பி.என் ஊடாக, பயனடைய முடியும். அந்த முறைமையின் ஊடாகவே நான், இப்போது பயன்படுத்துகின்றேன்.
வி.பி.என் முறைமைகள், அத்தகைய தடைகளை முற்றிலும் பயனற்றதாக ஆக்குகிறது. அதிகாரிகள் இன்னும் முற்போக்காக சிந்தித்து இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்