இலங்கை காவல்துறைக்கு நாமல் மறைமுக அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய நுகேகொடை பேரணி

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Namal Rajapaksa Government Employee NPP Government
By Kanooshiya Nov 24, 2025 07:30 AM GMT
Report

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச இலங்கை காவல்துறைத் திணைக்களத்துக்கு மறைமுக எச்சரிக்கையொன்றை வெளியிட்டாரா என அரசியல் ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நுகேகொடையில் ஒன்றிணைந்த எதிர்கட்சிகளின் ஏற்பாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பொதுப் பேரணியொன்று நடத்தப்பட்டது.

விழாவின் இளவரசனாக சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாமல் ராஜபக்ச அடையாளப்படுத்தப்பட்டதுடன், இதன்போது நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை மற்றும் ஜனாதிபதிக்கு நேரடியாக சவால் விடுத்தும் இருந்தார்.

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் சடுதியான மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

காவல்துறைக்கு அச்சுறுத்தல்

இதேவேளை, இந்த உரையின் போது தற்போதைய காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அதிகாரிகளுக்கு சில அச்சுறுத்தும் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இலங்கை காவல்துறைக்கு நாமல் மறைமுக அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய நுகேகொடை பேரணி | Namal Threaten The Police Nugegoda Rally

அதன்படி, அவரது உரையில், "காவல்துறையினர் அரசாங்கத்தின் பிடியில் உள்ளனர். அரச ஊழியர்கள் அரசியல் செய்யாதீர்கள். ஜனாதிபதி அரசியல் செய்வார்' என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியிருந்தார்.

உண்மையில், சொல்லப்போனால் ஆம், காவல்துறை மா அதிபர், அரசாங்கத்திற்கு தொடர்ந்து வாய்மொழியாக சேவை செய்யும் அரசாங்க ஊழியர்கள் மற்றும் சில அதிகாரிகளுக்கு நான் நினைவூட்டுகிறேன், நீங்கள் உங்கள் கடமைகளை நேர்மையாக செய்ய வேண்டும். அரசாங்கத்துடனான அரசியல் பிரச்சினையை நாங்கள் தீர்ப்போம்.

எனவே, ஜனாதிபதி அவர்களே, இந்த நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்போது, ​​இந்த நாட்டின் அப்பாவி காவல்துறை அதிகாரிகள், இலங்கை காவல்துறை, முப்படைகள் மற்றும் அரச சேவையை அதில் ஈடுபடுத்தத் தயாராக இருக்க வேண்டாம் என நாங்கள் உங்களுக்கு நினைவூட்டுகிறோம்." என தெரிவித்திருந்தார்.

ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்

ஜனாதிபதிக்கு இன்று பிறந்தநாள்

வழக்கு விசாரணைகள்

எனினும், சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச மீது தற்போது நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் பல வழக்குகள் காணப்படுகின்றன. அவற்றில் அவர் முக்கிய பிரதிவாதியாக பெயரிடப்பட்டும் உள்ளார்.

இலங்கை காவல்துறைக்கு நாமல் மறைமுக அச்சுறுத்தல்! சர்ச்சையை கிளப்பிய நுகேகொடை பேரணி | Namal Threaten The Police Nugegoda Rally

கிரிஷ் ஒப்பந்தம் தொடர்பாக சட்டமா அதிபர் ஏற்கனவே 70 மில்லியன் ரூபாய் குற்றவியல் முறைகேடு செய்ததற்காக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்.

இதேவேளை, தாஜுதீனின் கொலை விவகாரம் தொடர்பில் விரைவில் நீதிமன்றத்தின் முன்வர உள்ளது, மேலும் நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டபோது, ​​அவர்கள் FCID விசாரணைகளுக்கு அரைக் காற்சட்டை அணிந்து முன்னிலையாகியிருந்தனர்.

மேலும், நாமல் ராஜபக்ச தனது சட்டப்படிப்பை பெற்ற விதமும் ஒரு தீவிரமான பிரச்சினையாக தற்போது மாறியுள்ளது.

இவ்வாறான பின்னணியில், கடந்த 21 ஆம் திகதி நாமல் ராஜபக்ச ஆற்றிய உரையில் காவல்துறையினருக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்தாரா என பலக் கேள்விகளும், சந்தேகங்களும் தற்போது அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

60 வயதிலிருந்து மாதாந்த ஓய்வூதியம் பெறும் தரப்பு

தலைநகர் கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்!

தலைநகர் கொழும்பில் நள்ளிரவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம்!



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025