நவகமுவ துப்பாக்கிச் சூடு : விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள காவல்துறை
கொழும்பு நவகமுவவில் துப்பாக்கி சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குறித்த விசாரணைகளை காவல்துறை தீவிரப்படு்ததியுள்ளது.
நவகமுவ காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொரதொட, வந்துரம்முல்ல சமனல உயன பகுதியில் நேற்று (16.07.2026) நடைபெற்றுள்ளது.
குறித்த இளைஞன் கடுவெல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடையவராவார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
இளைஞன் பலி
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஹோமாகம வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம் என காவலதுறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் பிரதேசவாசிகளால் நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |