ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்யுங்கள் : பறந்த முறைப்பாடு
மக்கள் விடுதலை முன்னணியின் செயலாளர் ரில்வின் சில்வாவை உடனடியாகக் கைது செய்து சட்டத்தை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி முறைப்பாடொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
நிலக்கரி கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு மற்றும் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமைக்காகவே இவரை கைது செய்யுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய மக்கள் முன்னணியால் நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவில் இன்று (14) குறித்த முறைப்பாடு கையளிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டு மனு
கொழும்பு 12, நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள நிலக்கரி தொடர்பான முழு அதிகாரங்களுடன் கூடிய ஜனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழுவின் தலைவரிடம் புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டாரவினால் இம்முறைப்பாட்டு மனு கையளிக்கப்பட்டது.

இதன்போது சுகீஸ்வர பண்டாரவுடன், கட்சியின் கொழும்பு மாவட்ட செயலாளர் விகும் கித்சிறி, ஹோமாகம தொகுதி அமைப்பாளர் நிஷோன் இந்திக, பொரளை தொகுதி அமைப்பாளர் குஷான் மதநாயக்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர் ரொமேஷ் சாலிந்த ஆகியோர் முறைப்பாடளிக்க சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |