நீர்கொழும்பு சிறையில் மோதல் : மாற்றுச் சிறைகளுக்கு அவசரமாக மாற்றப்படும் கைதிகள்
Negombo
Department of Prisons Sri Lanka
Prisons in Sri Lanka
By Jaso
நீர்கொழும்பு சிறையில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒரு குழுவினரை அவசரமாக மாற்றுச் சிறைகளுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளை சிறை அதிகாரிகள் எடுத்து வருவதாக சிறை ஊடகப் பேச்சாளரும் சிறை ஆணையருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்தார்.
நீரகொழும்பு சிறையில் இடம்பெற்ற மோதலில் 05 சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் உயிரிழந்தனர். அத்துடன் 100ற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறை நெரிசலை குறைக்க துரித நடவடிக்கை
இந்த நிலையில் சிறை வளாகத்திற்குள் பாதுகாப்பை உறுதி செய்வதையும், நெரிசலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு கைதிகளில் ஒரு குழுவினரை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்