சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட நேபாள அரசு
மலையேற்ற சுற்றுலாவை மேம்படுத்த, தொலைதுார மேற்குப் பகுதியில் 97 சிகரங்களை கட்டணமின்றி செல்வதற்கு நேபாள அரசு அனுமதி அளித்துள்ளது.
நேபாள அரசு, மலையேற்ற சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்ற நிலையில், தொலைதுார மேற்குப் பகுதியில் 97 சிகரங்களுக்குச்செல்ல கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுலாத் துறையின் இயக்குனர் கருத்து தெரிவிக்கையில், “இமயமலைப்பகுதியில் குறைவாகப் பார்வையிடப்படும் பகுதிகளுக்கு ஏறுபவர்களை கவரும் முயற்சியாக அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு கர்னாலி மற்றும் சுதுர்பாஷ்சிம் மாகாணங்களில் உள்ள 97 சிகரங்களுக்கான ராயல்டியை தள்ளுபடி செய்யப்பட்டது.
வேலைவாய்ப்பு
5,870 மீட்டர் முதல் 7,132 மீட்டர் வரை உயரமுள்ள இந்த மலைகள், குறைந்த பொருளாதார செயல்பாடுகளைக் கொண்ட பகுதிகளுக்கு செல்லசுற்றுலாப் பயணிகளை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அதிக பார்வையாளர்களை ஈர்ப்பது, வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கு வருமானத்தை ஈட்டுவதே முக்கிய நோக்கம்.
இந்த முயற்சி நேபாளத்தின் ஆராயப்படாத மலைத்தொடர்களை மேம்படுத்தவும் உதவும், எவரெஸ்ட் சிகரத்தை முயற்சிக்கும்போது, முதலில் குறைந்தது 7,000 மீட்டர் சிகரத்தை ஏறுவதை கட்டாயமாக்குவதை அரசு முன்மொழிந்துள்ளது.
சபையின் பரிசீலனை
இந்த முன்மொழிவு, சுற்றுலாச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான ஒரு பகுதியாக இருக்கும், இது நேபாள பார்லிமென்டின் மேல் சபையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சட்டமாக மாறுவதற்கு முன்பு இரு அவைகளின் ஒப்புதலையும் பெற வேண்டும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 8,88.86 மீட்டர் உயரமுள்ள எவரெஸ்ட் சிகரத்தை அளவிடுவதற்கான கட்டணம் ஒரு நபருக்கு ரூபாய் ஒன்பது லட்சத்திலிருந்து ரூபாய் 15 லட்சமாக ஆக உயர்த்தப்படும்.
இது செப்டம்பர் முதல் நடைமுறைக்கு வரும்” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 3 நாட்கள் முன்
