மனித கடத்தல்களின் முக்கியஸ்தர் கைது: இலங்கை தொடர்பில் வெளிவந்த தகவல்
நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டின் பேரில் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நேபாள பிரஜை ஒருவரை நேபாள காவல்துறையினர் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது டெக்சாஸில் வசிக்கும் 52 வயதான ஹஸ்தா கௌதம், தனது வாடிக்கையாளர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி 20 மில்லியன் ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக நேபாள காவல்துறையின் மனித கடத்தல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கை முகவர்கள்
ஹஸ்தா கௌதம், கடத்தல் நடவடிக்கையின் மூளையாக இருந்து இதுவரை சுமார் 200 நேபாள பிரஜைகளை அமெரிக்காவிற்கு கடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக அவர், நேபாளம், ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இலங்கை, கொலம்பியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட இடங்களில் 5 முகவர்களை நியமித்துள்ளமை விசாரணையில் தெரியவந்தது.