இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்தது அவுஸ்திரேலியா!
இலங்கைக்கான புதிய அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக போல் ஸ்டீபன்சை , அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் நியமித்துள்ளார்.
டேவிட் ஹோலிக்கு பதிலாகவே போல் ஸ்டீபன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், ஸ்டீபன்ஸ் இந்தியா மற்றும் இந்து சமுத்திரக் கிளையின் உதவி செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.
முன்னதாக அவர், ஸ்வீடன் மற்றும் தாய்லாந்து, பிரேசிலுக்கான தூதுவராகவும், ஐக்கிய நாடுகள் சபைக்கான அவுஸ்ரேலியாவின் நிரந்தர தூதுவராகவும் பணியாற்றினார்.
வெளிவிவகார அமைச்சரின் கருத்து
தீவுநாடுகள் என்ற அடிப்படையிலும் இந்து சமுத்திர அயல்நாடுகள் என்ற அடிப்படையிலும் இலங்கை அவுஸ்திரேலியாவினது வலுவான நீடித்த உறவுகள் அமைதியான ஸ்திரதன்மை வளம்மிக்க இந்தோ பசுபிக்கிற்கான அபிலாசைகளின் அடிப்படையிலானவை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
70 வருடங்களில் இல்லாத மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கைக்கு உதவியளிக்க அவுஸ்திரேலியா உறுதிபூண்டுள்ளது.
இதன்படி 50 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அவசர உணவு மற்றும் சுகாதார தேவைகளை பூர்த்தி செய்ய வழங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.