இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பங்களாதேஷின் முன்னாள் பிரதமர்: நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பங்களாதேஷின் (Bangladesh) முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ( Sheikh Hasina) மற்றும் அவரது மகள் சைமா வாஜேத் புதுல் உள்ளிட்ட 17 பேருக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குடியிருப்பு நிலத்தைக் கையகப்படுத்தியமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டின் கீழே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் மாணவர்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு பிரதமர் பதவியிலிருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டு
இதனையடுத்து ஷேக் ஹசீனாவை தங்களிடம் ஒப்படைக்குமாறு பங்களாதேஷ் இடைக்கால அரசு, இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்நிலையில், ஷேக் ஹசீனா , மகள் சைமா வாஜெத் புதுலு ஆகியோர் மீது அந்நாட்டின் ஊழல் தடுப்பு ஆணைக்குழு சட்டவிரோதமாகக் குடியிருப்பு நிலத்தைக் கையகப்படுத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ளது.
பிடியாணை உத்தரவு
அத்துடன், இருவரும் தலைமறைவாக இருப்பதாக, ஊழல் தடுப்பு ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதனை ஏற்றுக் கொண்ட டாக்கா சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் எதிராகப் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், இது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிக்க, மே மாதம் 4 ஆம் திகதி விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு பங்களாதேஷின் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
