நவீனமயமாகும் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவை! அறிமுகமாகும் புதிய அம்சம்
இலங்கையில் மோட்டார் வாகன காப்பீட்டுச் சேவைகளை நவீனமயமாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, புதிய டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
குறித்த திட்டம், எதிர்வரும் மே மாதம் 1 ஆம் திகதி முதல் அறிமுகமாகவுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் திட்டம் வாகன உரிமையாளர்களுக்கு இலகுவான மற்றும் வினைத்திறனான காப்பீட்டுச் சேவைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றது.
டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை
இந்த முன்னெடுப்பு தேசிய டிஜிட்டல் மயமாக்கலில் ஒரு படி முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், இது பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பௌதீக பிளாஸ்டிக் அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகளைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கும் ஆதரவளிக்கும் என அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
இலங்கை காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணைக்குழு, இலங்கை காப்பீட்டு சங்கம் மற்றும் இலங்கை காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் டிஜிட்டல் மோட்டார் காப்பீட்டு அட்டை வெளியிடப்படுவதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்