கொழும்பு மாநகர சபையை கைப்பற்ற துடிக்கும் கட்சிகள் : தொடரும் இரகசிய கூட்டங்கள்
கொழும்பு (Colombo) மாநகர சபையில் யார் ஆட்சியை நிறுவுவது என்பது தொடர்பில் இரகசிய அரசியல் கூட்டங்கள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பிலான கலந்துரையாடல்கள் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்களுடன் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகளில் அதிகாரத்தை நிறுவுவது பற்றி கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள நிலையில், கொழும்பு மாநகர சபை மீது அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
சுயேச்சை குழு
கொழும்பில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இரு பெரிய கட்சிகளின் தலைவர்களும் தற்போது சுயேச்சை குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடன் தீவிர கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், கடந்த மூன்று நாட்களாக இரவு நேரங்களில் கொழும்பில் உள்ள சொகுசு ஹோட்டல்களில் இரு தரப்பினரும் இந்த விவகாரம் குறித்து விவாதித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் கட்சிகள்
எனினும், இதுவரை தீர்க்கமான முடிவினை எட்ட முடியாத நிலையில், அரசியல் கட்சிகள் தங்களுக்குள் திணறி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இவ்வாறான பிண்ணனியில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) இந்திய விஜயத்திற்குப் பிறகு இந்த விடயம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் ஒரு பக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய, கொழும்பு மாநகர சபையில் ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களையும் எதிர்க்கட்சிகள் 69 ஆசனங்களையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
🛑 you may like this...!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
