சர்வதேச நாணய நிதியத்திடம் சிக்கியுள்ள சிறிலங்கா - புதிய அமைச்சர்கள் நியமனத்தில் இழுபறி
புதிய அமைச்சர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 290 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதால் அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவைக்கு புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்கும் பட்டியல் சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் சில மாதங்களுக்கு முன்னரே அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த போதிலும், அமைச்சர்கள் நியமனம் தொடர்ந்தும் தாமதமாகி வந்த வண்ணமே காணப்படுகின்றது.
புதிய நியமனம்
வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின் புதிய அமைச்சர்கள் நியமனம் நடைபெறும் என்று வதந்திகள் பரவியநிலையில் தற்போது அது தாமதமாகும் என்று கூறப்படுகிறது.
அமைச்சரவையில் தற்போது பதினெட்டு உறுப்பினர்கள் காணப்படுவதுடன், அரசியலமைப்பின் படி மேலும் பன்னிரண்டு அமைச்சர்களை நியமிக்க அதிபருக்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, பன்னிரெண்டு அமைச்சர்களின் புதிய நியமனம் எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குப் பின்னர் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் அறியமுடிகிறது.
அமைச்சரவையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் வஜிர அபேவர்தன, தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், ஐக்கிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏ.எல்.எம்.ஏ.தாவுல்லா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எஞ்சியவர்கள் சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படுவார்கள் என அறியப்படுகிறது.
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்
