பிரதமரின் தீர்மானத்தால் உருவாகிய புதிய சிக்கல்: விடப்பட்ட எச்சரிக்கை
எதிர்வரும் நாட்களில் அரசாங்க மருத்துவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணியிலிருந்து விலகி வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளுக்குச் செல்லும் நிலை ஏற்படக் கூடும் என அரச மருத்துவர்கள் சங்கத்தின் பிரமுகர் மருத்துவர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் வகையில் பிரதமர் ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் யோசனைப்படி அரச ஊழியர்கள் அவர்களின் அடிப்படைச் சம்பளத்துக்கு ஈடான தொகையொன்றையே மொத்தக் கொடுப்பனவுகளாக பெற முடியும். அதனை விட அதிகரித்த தொகையில் கொடுப்பனவுகளை வழங்க முடியாது என தெரிவித்தார்.
இந்தக் கட்டுப்பாடு காரணமாக அரசாங்க மருத்துவர்கள் மாதாந்தம் சுமார் 30 ஆயிரம் ரூபா வரையான கொடுப்பனவு இழப்பை எதிர்கொண்டுள்ளனர்.
அவ்வாறான நிலையில் அரசாங்கப் பணியில் ஈடுபடுவது தொடர்பில் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
இது பற்றிய விரிவான செய்திகளையும் மேலும் பல முக்கிய செய்திகளையும் தெரிந்து கொள்ள எமது காலை நேர முக்கிய செய்திகளுடன் இணைந்திருங்கள்,