போர் நெருக்கடியில் நைஜர் இராணுவம் - தன்னார்வ படையினருக்கு அழைப்பு
பிராந்திய நாடுகளின் படையெடுப்பு நிகழவிருக்கும் நெருக்கடியில் இருக்கும் நைஜர், அதனை எதிகொள்வதற்காக தன்னார்வ படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
முகமது பசூமின் ஆட்சியை மீன்றும் நிறுவதற்காக மேற்கு ஆபிரிக்க நாடுகள் தயார் நிலையில் உள்ளது, இந்த தாக்குதலைத் தடுப்பதற்காக தன்னார்வ படையினரைத் திரட்ட தீர்மானித்துள்ளதாக நைஜரின் தலைநகரில் செயற்பட்டுவரும் தன்னார்வ குழுக்கள் தெரிவித்துள்ளது.
மருத்துவ, தொழிநுட்ப, மற்றும் போக்குவரத்து உதவிகளை இராணுவத்திற்கு வழங்குவதற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதிபராக பதவியேற்று

பிரான்ஸின் காலனித்துவத்துவ ஆட்சியில் இருந்து நைஜர் சுதந்திரம் பெற்ற பின்னர் இராணுவ ஆட்சியும் ஜனநாயக ஆட்சியும் மாறி மாறி இடம்பெற்று வந்தது.
இந்நிலையில் 2021ஆம் ஆண்டு முகமது பஸூம் அதிபராக பதவியேற்று ஜனநாயக ஆட்சியை மேற்கொண்ட நிலையில், அமைதியான முறையில் நடைபெற்ற முதல் ஆட்சி மாற்றம் இது தன என்றும் குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஜனநாயக ஆட்சியை கடந்த மாதம் 26 ஆம் திகதி கிளர்ச்சியின் மூலம் இராணுவத்தினர் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
நைஜர் ராணுவம்

இதற்கு இ.நா, ஐரோப்பிய ஒன்றியம், ஆபிரிக்க ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வந்துள்ளன.
முகமது பஸூமிடம் ஆட்சியை ஒப்படைக்கும் படி மேற்கு ஆபிரிக்க நாடுகளின் கூட்டமைப்பான யெகோவாஸ் கடந்த 06 ஆம் திகதி விதித்த கெடுவினை நைஜர் ராணுவம் பொருட்படுத்தாத காரணத்தால் நைஜர் மீது ராணுவ நடவடிக்கைகளை எடுக்க குறித்த அமைப்பு தீர்மானித்துள்ளது.