கோட்டாபய அரசுக்கு விதிக்கப்பட்டது காலக்கெடு! பகிரங்க அறிவித்தலை வெளியிட்ட முன்னாள் அமைச்சர்
கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், தற்போது அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கான வரைவை தயாரித்து, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜேவிபியுடன் கலந்துரையாடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த பிரேரணையின் உள்ளடக்கம் தொடர்பில் அந்த இரண்டு எதிர்க்கட்சிகளும் தமது சம்மதத்தை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாரத்திற்குள் பதவி விலகாவிட்டால் அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை, அடுத்த வாரத்திற்குள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உதய கம்மன்பில எச்சரித்துள்ளார்.
நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தாம் உட்பட 120 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தெரிவிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
