இலங்கையில் போர்க்குற்றங்களே இடம்பெறவில்லை.! அநுர தரப்பின் அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் எந்தவிதமான போர்க்குற்றங்களும் இடம்பெறவில்லை என்று பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை ஊடமொன்றுக்கு வழங்கியுள்ள தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.
போரில் நிகழக்கூடாத விடயங்கள்
அதன்போது, மேலும் கருத்து தெரிவித்துள்ள பிரதி அமைச்சர், “போரின் போது நிகழக்கூடாத சில விடயங்கள் நடந்திருக்கலாம் என்ற கருத்துகள் இருக்கின்றன.
ஆனால் அவை அனைத்தும் போர்க்குற்றங்கள் என்ற வகையில் வராது, போரின் போது சில சூழ்நிலைகள் தவிர்க்க முடியாமல் ஏற்படும்” எனக் கூறியுள்ளார்.
அதனால் இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அர்த்தமில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெனீவா மனித உரிமைகள் அமர்வு
மேலும், ஜெனீவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் அமர்வில் இலங்கைக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவுள்ளனவா என்ற கேள்விக்கு பதிலளித்தபோது பிரதி பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர,
“அது குறித்து எனக்கு தெரியும். கடந்த 11 மாதங்களாக எங்கள் அரசு சமரசத்தையும் இன நல்லிணக்கத்தையும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கும் பாடுபட்டுள்ளது.
சட்டமும் ஒழுங்கும் நிலைநிறுத்தும் வகையில் எங்களின் கொள்கை முடிவுகள் சமூகத்தில் உண்மையான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
இப்போது எத்தனை கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டாலும், கடந்த 11 மாதங்களில் நாங்கள் செய்தவற்றை உலகிற்கு காட்டியுள்ளோம்,” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
