பல்கலைக்கழக செயற்பாடுகள் ஆபத்தில் : எச்சரிக்கும் பேராசிரியர்
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொழில்சார் நடவடிக்கைகளினால் பல்கலைக்கழக அமைப்பில் நீர், மின்சாரம் மற்றும் இணைய வசதிகள் கூட இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் விஷாக சூரியபண்டார(Professor Vishaka Suriyabandara) தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக சுமார் இரண்டு மாதங்களாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார்.
இணைய வசதிகள்
இணைய வசதிகள் ஒரு மாதமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதால் பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் இணைய வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்து தமது சொந்தப் பணத்தில் விரிவுரைகளை நடாத்துவதாகவும் சூரியபண்டார தெரிவித்தார்.
ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும்
இதுதவிர, பேராசிரியர்களுக்கு பல்கலைக் கழகத்தில் இருந்து தண்ணீர், மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில்லை என்றும், மின்வெட்டு காரணமாக, உறைவிப்பான்களில் சேமிக்கப்படும் ஆராய்ச்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், பேராசிரியர் கூறினார்.
இதன்படி, பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் இவ்விடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாகவும், மௌனம் காப்பது பிரச்சினைக்கு தீர்வாகாது எனவும் விஷாகா சூரியபண்டார தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |