இன்று நல்லூரானின் வடக்கு வாசல் வளைவு திறப்பு - மக்களுக்கான அறிவித்தல்
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மெருகூட்டும் வகையில் வடக்கு வாசலில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூரான் வடக்கு வாசல் வளைவு, இன்று (06.08.2026) வியாழக்கிழமை ஆடிக் கார்த்திகை நன்னாளை முன்னிட்டு தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.
இதனை முன்னிட்டு, முற்பகல் 10.30 மணிக்கு சட்ட நாதர் சிவன் ஆலயத்திலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டைத் திருக்கை காளை மாட்டு வண்டி மங்கள வாத்தியங்கள் முழங்க புறப்படவுள்ளது.
நல்லூரான் வடக்கு வாசல் வளைவு
சட்டநாதர் வீதியுடாக பயணிக்கும் இந்த ஊர்வலம் முடமாவடிச் சந்தியை அடை ந்து அங்கிருந்து புதிய வடக்கு வாசல் வளைவை நோக்கிச் செல்லும்.

இந்த விசேட நிகழ்வில் மாட்டு வண்டியில் எடுத்துச் செல்லப்படும் நெல் பெட்டகத்தில் பக்தர்கள் தங்களது நெல்லையும் சமர்ப்பிக்க முடியும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
தொடர்ந்து, நண்பகல் 12.00 மணியளவில் தெய்வேந்திர முகூர்த்த நேரத்தில், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டி முதன்முறையாக புதிய “நல்லூரான் வடக்கு வாசல் வளைவு” ஊடாகப் பிரவேசிக்கவுள்ளது.
பின்னர் அந்த நெல் பெட்டகம் நல்லூர் கந்தசுவாமி திருவடிகளில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. ஆடிக் கார்த்திகை நன்னாளில் நடைபெறும் இந்த மங்களகரமான நிகழ்வில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஆலய நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |