வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Sri Lankan Peoples Northern Province of Sri Lanka Floods In Sri Lanka Nagalingam Vedanayagam
By Sathangani Dec 02, 2025 01:50 PM GMT
Report

அனர்த்ததால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மாகாண மக்களுக்கு உதவுவதற்கு உள்ளூர் மற்றும் புலம்பெயர் உறவுகள் ஆர்வத்துடன் முன்வருகின்றமை மகிழ்ச்சியளிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N. Vethanayagan) தெரிவித்துள்ளார்.

எனினும், இவ்வுதவிகள் பயனாளிகளைச் சரியான முறையில் சென்றடைவதையும், மோசடிகள் இடம்பெறாதிருப்பதையும் உறுதிப்படுத்த, அந்தந்த மாவட்டச் செயலர்களின் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள 'இடர் முகாமைத்துவக் குழுக்களை' தொடர்புகொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று (02) காலை ஆளுநர் செயலகத்தில் ஐ.நா. முகவர் அமைப்புக்கள், சர்வதேச மற்றும் உள்ளூர் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நடைபெற்ற அவசர கலந்துரையாடலின்போதே ஆளுநர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

பேரிடருக்கு மத்தியில் இரு குழந்தைகளுடன் மல்வத்து ஓயாவில் குதித்த தாய்!

இடர் முகாமைத்துவக் குழு

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "அனைவரும் ஒரே வகையான உதவிகளை வழங்குவதைத் தவிர்த்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உண்மையான தேவைகளை அறிந்து உதவுங்கள். இதற்கு மாவட்டச் செயலகங்களில் உருவாக்கப்பட்டுள்ள 'இடர் முகாமைத்துவக் குழுக்களை' அணுகுங்கள்.

வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Northern Province Flood Relief Operations Governor

வெளிநாடுகளில் நிதி திரட்டி, பெயரளவில் உதவிகளைச் செய்துவிட்டுப் புகைப்படங்களை மட்டும் அனுப்பும் மோசடிக் கும்பல்கள் தொடர்பில் விழிப்புடன் இருக்கவும்.

மாவட்டச் செயலகத்தின் பரிந்துரை அல்லது அங்கீகாரம் இல்லாமல் தனிப்பட்ட ரீதியில் அணுகுபவர்களிடம் கவனமாக இருக்கவும்.

மக்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். எனவே, உணவுப் பொதிகளைத் தாண்டி, அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் மீள்குடியேற்றத்திற்குத் தேவையான உதவிகளை வழங்குவது பயனுள்ளதாக அமையும்.

அரசாங்கம் வழங்கும் நிவாரணங்களுக்கு மேலதிகமாக, மக்களுக்குத் தேவைப்படும் ஏனைய அவசியமான உதவிகளை (Gap filling) தன்னார்வலர்கள் பொறுப்பேற்பது சிறந்தது." என தெரிவித்தார்.

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு : விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

மாவட்டச் செயலக அதிகாரிகள் 

இதேவேளை நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க விரும்புவோர் பின்வரும் மாவட்டச் செயலக பதவிநிலை அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Northern Province Flood Relief Operations Governor

யாழ்ப்பாணம் : சுரேந்திரநாதன் - 077 484 0199

கிளிநொச்சி : அஜித்தா - 077 565 0671

மன்னார் : பிரதீப் - 071 990 5324

வவுனியா : கமலதாசன் - 077 613 8369

முல்லைத்தீவு: ரஜினிகாந்த் - 077 370 7720 / கோகுலராஜ் - 077 395 7886

“மேற்படி அதிகாரிகளை தொடர்பு கொண்டு அவர்களிடம் பொருட்களை ஒப்படைக்க முடியும் என இன்றைய கூட்டத்தில் கருத்துறைக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாட்டில் உள்ள ஆலயங்கள் , அறக்கட்டளைகள் , உதவி அமைப்புக்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகளால் கொள்வனவு செய்து பொருட்களை ஒப்படைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் பற்றிய விபரங்கள்

கொள்வனவு செய்யப்பட்ட விலைச்சிட்டை , பொருட்கள் விபரம் , மற்றும் அவற்றின் படங்கள் ஆகியவற்றை ஆவணப்படுத்தி , பெற்றுக்கொண்டதற்கான அத்தாட்சிக் கடித்தினை அரச இலச்சினைக் கடித்தில் கையோப்பம் இட்டு , குறித்த அலுவலர் அமைப்புக்களுக்கு வழங்குவார்.

வடக்குக்கான நிவாரணம்: நன்கொடையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Northern Province Flood Relief Operations Governor

அத்தோடு பெறப்பட்ட பொருட்கள் பற்றிய விபரங்களும் மாவட்ட அரசாங்க அதிபரின் இணையத்தளத்திலும் பிரசுரமாகும் . இதன் மூலம் முகவர்கள் சிலரது மோசடிகளும் தவிர்க்கப்படும் .

தேவையற்ற போக்குவரத்து செலவீனமும் தவிர்க்கப்படும் . புலம்பெயர் ஆலயங்கள் அறக்கட்டளை அமைப்புக்கள் என்பனவும், தமக்கு பணம் வழங்கிய புலம்பெயர் மக்களுக்கும் இவற்றை சமர்ப்பிக்க முடியும்.

இதன் மூலம் மேலும் அமைப்புக்கள் மீது நம்பகத்தன்மை கட்டியெழுப்பபடும் . அதிகாரிகளால் பெறப்பட்ட பொருட்கள் பிரதேச செயலாளர் , கிராம அலுவலர் ஊடாக தேவையுள்ள மக்களுக்கு பொருட்கள் சென்று சேரும் .

இதற்கான ஆவணங்கள் கிராம அலுவலர் , பிரதேசெயலாளர் ஆகியோரால் பராமரிக்கப்படும் . நம்பகத்தன்மை அற்ற முகவர்கள் , மற்றும் சிலரிடம் பணத்தையோ பொருளையோ வழங்கி , புலம்பெயர் மக்கள் ஏமாறாமல் இந்த கட்டமைப்பு ஊடாக செயலாற்றுவது மோசடிகளை தவிர்க்க உதவும் . இதனை கருத்தில் கொள்ளவேண்டும்”

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026