பயணிகள் பேருந்து உரிமையாளர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு
திருத்தப்பட்ட பேருந்து கட்டணங்களைப் பேருந்துகளுக்குள் பயணிகளுக்கு காட்சிப்படுத்துமாறு மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து சேவை அதிகார சபை அறிவித்துள்ளது.
ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ள அதிகாரசபை, பயணிகள் சேவை அனுமதி 16 (A)-இன் நிபந்தனைகளின்படி இது கட்டாயமாகும் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் பேருந்துகளுக்குள் வைக்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு செய்யாத பேருந்துகளின் உரிமங்கள் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ரத்து செய்யப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாடுகள்
அதன்படி, சம்பந்தப்பட்ட கட்டணங்கள் காண்பிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய சோதனைகள் தொடங்கப்படும் என்றும், இது தொடர்பாகப் பயணிகளுக்கு ஏதேனும் முறைப்பாடுகள் இருந்தால், அவர்கள் போக்குவரத்து சேவை அதிகார சபையிடம் தெரிவிக்கலாம் என்றும் கூறியுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட முறைப்பாடுகளை 0112860860 என்ற தொலைபேசி எண்ணுக்கோ அல்லது 0702860860 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கோ தெரிவிக்கலாம்.
தேசிய போக்குவரத்து அதிகார சபை கடந்த 23 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், பேருந்துக் கட்டணங்களை 12.19% உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |