ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி - சுற்றுலாப் பயணிகளின் வருகையில் மாற்றம்
2026 ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் கணிசமான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அந்தவகையில், ஏப்ரல் மாதத்தில் 117, 893 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள்
அதன்படி குறித்த காலப்பகுதிக்குள் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 35,862 ஆகும்.

அத்துடன் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 9,585 சுற்றுலாப் பயணிகளும் அவுஸ்திரேலியாவில் இருந்து 9,142 சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்துள்ளனர்.
மேலும் சீனாவிலிருந்து 8543 பேரும் ரஷ்யாவிலிருந்து 6172 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இலங்கை ரூபாயின் பெறுமதி
இதேவேளை 2026 ஏப்ரல் மாத இறுதியில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி 2.9% இனால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

கடந்த பெப்ரவரி இறுதியில் மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் சூழலைத் தொடர்ந்து, வெளிநாட்டுத் துறையில் ஏற்பட்ட அழுத்தங்கள் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தையில் இருந்து வெளிநாட்டு நாணயங்களை கொள்வனவு செய்த போதிலும், அந்த மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் காரணமாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |