யாழில் பெண்ணொருவரிடம் கைவரிசை காட்டிய நபர் கைது
யாழ்ப்பாணத்தில் (Jaffna) பெண்ணொருவரிடம் தங்கச் சங்கிலியை அபகரித்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கொள்ளைச் சம்பவம் இன்று (05.03.2025) நெல்லியடி - வல்லை வெளிப்பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், நெல்லியடி காவல்துறை பிரிவுக்குட்பட்ட வல்லை வெளிப்பகுதியில் சென்ற பெண்ணொருவரிடம் இன்று(05) காலை உயர் ரக மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் தங்க நகையை அபகரித்து சென்றுள்ளனர்.
கைது நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பகுதியில் மோட்டார் சைக்கிள் மற்றும் நகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றையவரை கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கீழ் இயங்கும் காவல்துறை புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கைதான சந்தேக நபரை நாளை(06) பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நெல்லியடி காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
