மட்டு. மாவடி வேம்பு பகுதியில் இன்றுமாலை இடம்பெற்ற துயரம் - மக்கள் போராட்டம்
மட்டக்களப்பு சந்திவெளி காவல்துறை பிரிவுக்குட்பட்ட மாவடிவேம்பு பண்ணை வீதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மாவடிவேம்பு பகுதியை சேர்ந்த 32 வயதுடைய சிவலிங்கம் பவாநந்தகுமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
துவிச்சக்கர வண்டியில் வந்தவரை மாவடிவேம்பு - பண்ணை வீதி வழியாக வீதி அபிவிருத்தி வேலைக்காக கற்கள் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் மோதியதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்து தொடர்பாக பிரதேச மக்கள் தமது எதிர்ப்பை தெரிவித்து கலகத்தில் ஈடுபட்டனர்.இதனால் அமைதியின்மை ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு சந்திவெளி காவல்துறையினர் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.
சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்தை ஏற்படுத்திய வாகனம் சந்திவெளிப் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்ப்பட்டுள்ளது.குறித்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
