கருத்து சுதந்திரத்தை நாடாளுமன்றத்தில் பறிகொடுத்துள்ள எதிர்க்கட்சி
பேச்சு சுதந்திரம் என்பது பாராளுமன்ற ஜனநாயகத்தின் முக்கிய அங்கமாகும். அரசாங்கம் சார்ந்து,அரசாங்கத்தை விமர்சித்து மக்களின் கருத்துக்களை வெளிப்படுத்தும் போது, குண்டர்கள் எங்களை அடக்குவதற்கு அதிகாரங்களை பயன்படுத்துகின்றனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார (Ranjith Madhuma Banda) தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து மக்களின் பிரச்சினைகளை பேசவே நாடாளுமன்றத்திற்கு அனுப்புகிறார்கள்.
எதிர்க்கட்சிகளுக்கே குழுநிலை விவாதத்தில் அதிக நேரத்தை வழங்க வேண்டும். இந்த நாட்களில் வரவு செலவுத்திட்ட விவாதங்களை நடக்கின்றன.
நேற்றைய தினம் உள்நாட்டு அலுவல்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு சார் தலைப்புகளில் குழுநிலை விவாதங்கள் இடம் பெற்றன.பாதுகாப்பு அமைச்சு சார் விடயங்களில் அன்றைய தினம் விவாதத்தில் கலந்து கொண்ட போது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் பாதுகாப்பிற்கு பெரும் தடையும் அச்சுறுத்தலும் ஏற்பட்டது.
நாடாளுமன்றத்தில் சன்டித்னம் காண்பிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் குண்டர்கள் சட்டத்தை நடத்துவதற்கு இடமளிக்க வேண்டாம் என்றும் எமது விவதாங்களுக்கான காலங்களை நீடிக்குமாறும் சபாநாயகரிடம் கோருகின்றோம்.
பொதுவாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சியின் ஒப்புதலுடன் விவதாங்களுக்கான காலத்தை நீட்டிப்பதே மரபாகும். ஆனால் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தனது உரையை முடிப்பதற்கு முன்னர் ஒலிவாங்கியை அணைத்தார்கள்.
.நாடாளுமன்ற ஜனநாயகம் அப்படித்தான் செயல்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சென்று சபாநாயகருடன் கலந்துரையாடிய போது, சபாநாயகர் இருக்கைக்கு பின்னால் இருந்து வந்த அரசாங்க பிரதம கொறடா நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்காரவை அச்சுறுத்தி தாக்க முற்பட்டார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் நாடாளுமன்ற மரபுகளை விதிகளை மீறி ஆளுங்கட்சியில் இருந்து எதிர்க்கட்சி உறுப்பினர்களின் இருக்கைகளின் பக்கம் வந்தனர். முன் எப்பொழுதும் நடக்காத ஒன்று.எங்கள் பக்கம் வந்து எங்கள் எம்.பி.க்களை மிரட்டி தாக்க முயன்றனர்.
இதுவே இன்று நாடாளுமன்றத்தில் ஜனநாயகவாதிகளாகிய எமக்கு இருக்கும் இடம்.ஜனநாயக ரீதியாக கருத்து சுதந்திரத்தைக் கூட நாடாளுமன்றத்தில் பறிகொடுத்துள்ள நிலைக்கு தள்ளப்பட்டோம்.
கரு ஜயசூரிய சபாநாயகராக இருந்த காலத்தில் நாற்காலியால் தாக்கப்பட்டதை நாம் நினைவிற்கு வருகிறது. மிளகாய் பொடியும் மிளகாய் தூவளும் சார்ந்த அமானூஷிய பயங்கரவாதம் வந்திருக்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்த வேண்டும். என தெரிவித்துள்ளார்.