இந்தியாவில் அதிரடியாக முடக்கப்பட்ட பாகிஸ்தான் பிரபலங்களின் சமூக வலைதளங்கள்
இந்தியாவில் (India) பாகிஸ்தான் (Pakistan) பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, பாகிஸ்தானின் பிரபல பின்னணி பாடகர் அதிஃப் அஸ்லம், நடிகர் ஃபவாத் கான், கிரிக்கெட் வீரர்கள் ஷாஹித் அஃப்ரிதி, பாபர் ஆசம் உள்ளிட்ட பல பிரபலங்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன.
இந்த தடை, சமீபத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு எடுத்து வந்த கடுமையான நடவடிக்கைகளில் ஒன்றென தெரிவிக்கபடுகின்றது.
இந்தியாவில் தடை
இதற்கு முந்தைய நாட்களில் 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், அவை தவறான தகவல்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அத்தோடு, இந்தியா பாகிஸ்தானுடன் உள்ள சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தியதுடன் விமான போக்குவரத்தையும் வர்த்தகத் தொடர்புகளையும் முடக்கியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பாகிஸ்தான் விமானப்பாதையை மூடிவிட்டு, 1972-ஆம் ஆண்டு சிம்லா ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகள், இந்தியா-பாகிஸ்தான் உறவுகளில் மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி, இருநாடுகளுக்கும் இடையிலான குறைந்தளவான உறவுகளையும் முடக்கிவிட்டன என்பன குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
