பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils M A Sumanthiran Israel-Hamas War
By Eunice Ruth May 14, 2024 05:25 PM GMT
Report

பலஸ்தீனத்தில் (Palestine) தற்போது இடம்பெறும் இனப்படுகொலை தான் இலங்கையில் (Sri Lanka) தமிழர்களுக்கும் நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M.A. Sumanthiran) சுட்டிக்காட்டியுள்ளார்.   

பலஸ்தீனுக்காக தற்போது குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது என இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் புலப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவு கூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது.

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

போர் வலயத்திற்குள் 4 இலட்சம் மக்கள் சிக்கியிருந்தனர். அவர்கள் உண்ண உணவின்றி உப்பில்லா கஞ்சியையே அருந்தினார்கள். இதனை நினைவு கூரும் வகையில் அங்கு கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமாகும்.

இலங்கையில் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் இழப்புகளை நினைவுகூரும் நாளாகவே இதனை பார்க்கின்றோம். எமது மக்கள் இறுதி கட்ட யுத்தக் காலத்தில் கஞ்சியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள்.

கைது நடவடிக்கை

இதனை நினைவுகூர இடமளிக்காமை அரசாங்கத்தின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையை பார்த்தோம்.

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை

குறித்த பெண், ஆண் காவல்துறை அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். கஞ்சியை அருந்தியதாகவே அவரை இழுத்துச் செல்கின்றனர்.

கஞ்சி விவகாரத்தில் காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இரட்டை நிலைப்பாடு 

இந்த நேரத்தில் பலஸ்தீனத்தில் இறக்கும் மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கே இறந்தவர்கள் தொடர்பில் நிலைப்பாடு என்ன?

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு

இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? பலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா?

பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் நீங்கள் ஏன் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுகின்றீர்கள்?

சுதந்திரமான விசாரணை

இது இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. யுத்தம் என்பது சுத்தமானதாக இருக்க முடியாது. ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமாகும்.

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

ஆனால், இங்கே உள்ளக விசாரணை தொடர்பில் கூறிக்கொண்டு ஒரு தரப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிகின்றோம். ஆனால் அதே மனசாட்சியுடன் இங்கு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், உள்ளக பொறிமுறை என்று கூறிக்கொண்டு ஏன் இவ்வாறு நயவஞ்சகமாக செயற்படுகின்றீர்கள்?”என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் அரசியல் : நாளை தெரியப்போகும் முடிவு!

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் அரசியல் : நாளை தெரியப்போகும் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025