பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு

Sri Lankan Tamils M A Sumanthiran Israel-Hamas War
By Eunice Ruth May 14, 2024 05:25 PM GMT
Report

பலஸ்தீனத்தில் (Palestine) தற்போது இடம்பெறும் இனப்படுகொலை தான் இலங்கையில் (Sri Lanka) தமிழர்களுக்கும் நேர்ந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் (M.A. Sumanthiran) சுட்டிக்காட்டியுள்ளார்.   

பலஸ்தீனுக்காக தற்போது குரல் கொடுக்கும் இலங்கை, தமிழர்களுக்கு என்ன செய்தது என இன்றைய (14) நாடாளுமன்ற அமர்வின் போது அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.  

இந்த நடவடிக்கையின் மூலம் இலங்கையின் நயவஞ்சக தன்மை மற்றும் இரட்டை வேடம் புலப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். 

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ மே மாதத்தில் முள்ளிவாய்க்காலில் பெருமளவான மக்கள் கொல்லப்பட்டனர். அந்த மக்களை நினைவு கூரும் வாரமாக இந்த வாரம் இருக்கின்றது.

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

இஸ்ரேல் உடனான இலங்கையின் உறவு: துண்டிக்குமாறு கோரும் எம்.பி!

போர் வலயத்திற்குள் 4 இலட்சம் மக்கள் சிக்கியிருந்தனர். அவர்கள் உண்ண உணவின்றி உப்பில்லா கஞ்சியையே அருந்தினார்கள். இதனை நினைவு கூரும் வகையில் அங்கு கஞ்சி பரிமாறப்படுவது வழக்கமாகும்.

இலங்கையில் யுத்தத்தில் ஏற்பட்ட மக்கள் இழப்புகளை நினைவுகூரும் நாளாகவே இதனை பார்க்கின்றோம். எமது மக்கள் இறுதி கட்ட யுத்தக் காலத்தில் கஞ்சியைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் போராடினார்கள்.

கைது நடவடிக்கை

இதனை நினைவுகூர இடமளிக்காமை அரசாங்கத்தின் அவல நிலைமையையே எடுத்துக்காட்டுகின்றது. இந்த விடயத்தில் சம்பூரில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்ட முறையை பார்த்தோம்.

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை

கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தம்: மீண்டும் பணிக்கு திரும்புமாறு கோரிக்கை

குறித்த பெண், ஆண் காவல்துறை அதிகாரிகளால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். கஞ்சியை அருந்தியதாகவே அவரை இழுத்துச் செல்கின்றனர்.

கஞ்சி விவகாரத்தில் காவல்துறையினர் நீதிமன்றத்தின் ஊடாக தடையுத்தரவுகளையும் பெற்றுக் கொள்கின்றனர்.

இரட்டை நிலைப்பாடு 

இந்த நேரத்தில் பலஸ்தீனத்தில் இறக்கும் மக்கள் தொடர்பில் பேசிக்கொண்டு இருக்கின்றோம். ஆனால் இங்கே இறந்தவர்கள் தொடர்பில் நிலைப்பாடு என்ன?

பலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலை! தமிழர்களுக்கும் நேர்ந்ததாக சுமந்திரன் சுட்டிக்காட்டு | Palestine Genocide Happened In Sri Lanka Tamils

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு

புனித இடங்களாக அறிவிக்கப்படவுள்ள மத வழிபாட்டுத் தலங்கள்! வெளியானது அறிவிப்பு

இது இரட்டை நிலைப்பாடு இல்லையா? பலஸ்தீனத்தின் மீது அக்கறை கொண்டுள்ளீர்கள். அந்த அக்கறை எங்கள் மக்கள் மீது இல்லையா?

பலஸ்தீன விடயத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தொடர்பிலும், சர்வதேச தலையீடு அவசியம் என்றும் கூறும் நீங்கள் ஏன் எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கூறும் போது உள்ளக விவகாரம் என்று கூறுகின்றீர்கள்?

சுதந்திரமான விசாரணை

இது இரட்டை வேடத்தையே காட்டுகின்றது. யுத்தம் என்பது சுத்தமானதாக இருக்க முடியாது. ஒரு சுதந்திரமான விசாரணை அவசியமாகும்.

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

நினைவுகூரல் உரிமையை மறுதலிக்கும் சிறிலங்கா அரசு: தமிழர் தரப்பு கண்டனம்

ஆனால், இங்கே உள்ளக விசாரணை தொடர்பில் கூறிக்கொண்டு ஒரு தரப்பு விசாரணையை முன்னெடுக்கின்றனர்.

இஸ்ரேல் தாக்குதலை நாங்கள் கடுமையாக கண்டிகின்றோம். ஆனால் அதே மனசாட்சியுடன் இங்கு 15 வருடங்களுக்கு முன்னர் நடந்தவை தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த நிலையில், உள்ளக பொறிமுறை என்று கூறிக்கொண்டு ஏன் இவ்வாறு நயவஞ்சகமாக செயற்படுகின்றீர்கள்?”என அவர் கேள்வியெழுப்பியுள்ளார். 

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் அரசியல் : நாளை தெரியப்போகும் முடிவு!

அமைச்சர் விஜயதாச ராஜபக்சவின் அரசியல் : நாளை தெரியப்போகும் முடிவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

மாத்தளை, கிளிநொச்சி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், Villeneuve-Saint-Georges, France

22 May, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, Luzern, Switzerland

23 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு

27 May, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, Montreal, Canada, Toronto, Canada

26 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி வடக்கு, கொழும்பு, Toronto, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, பருத்தித்துறை

25 May, 2026
அகாலமரணம்

மல்லாகம், Scarborough, Canada

23 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Toronto, Canada

08 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, நீர்வேலி தெற்கு, Toronto, Canada

27 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பிரான்ஸ், France

23 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், London, United Kingdom

27 Apr, 2026
கண்ணீர் அஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி

26 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

26 May, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, சிறுப்பிட்டி

26 May, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Alphen aan den Rijn, Netherlands

26 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், India, Toronto, Canada

13 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, கிளிநொச்சி, Toronto, Canada

25 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

07 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், Toronto, Canada

05 Jun, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015