பெற்றோர்களின் மோசமான செயற்பாட்டால் பரிதாப நிலையில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் - வெளியான எச்சரிக்கை!
இலங்கையில் போதைப்பொருள் பாவனை தீவிரமாக அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் பலரும் இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர்.
இவ்வாறு பெற்றோர்கள் போதைவஸ்துக்கு அடிமை ஆகியதன் விளைவாக ஏராளமான சிறுவர்கள் சிறுவர் காப்பகங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குறித்த தகவலை சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை வெளியிட்டுள்ளது.
சிறுவர்களின் நிலை

பெற்றோர்களின் இவ்வாறான செயல்பாடுகளால் சுமார் 12,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையான பெற்றோர்களின் பிள்ளைகள் தங்கள் பாட்டி அல்லது தாத்தாவுடன் வைத்தியசாலைக்கு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அடிமையான மாணவர்கள்

இதேவேளை, பாடசாலை மாணவர், மாணவிகளிடையே ஐஸ் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
போதைக்கு அடிமையான மாணவர்களின் எண்ணிக்கை வேகமெடுத்துள்ளதாகவும், பாடசாலை விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் பீர் குடிப்பது அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விழிப்புணர்வு எச்சரிக்கை

பயங்கரவாதத்தை விட கொடூரமானது இந்த போதைப்பொருள் பாவனை என்றும் இதனை தடுப்பதற்கு மக்கள் ஆர்ப்பட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்வாறான மோசமான செயற்படுகள் தீவிரமடைந்தால் நாட்டை கட்டி எழுப்ப வருங்கால சந்ததியே இருக்காது என்று சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனை ஆலோசகர் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.