பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை மீதான நாடாளுமன்ற விவாதம் இன்று (10) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 10ஆம் திகதி, காலை 9.30 மணி - 10.00 மணி வரை நிலையியற் கட்டளைகள் 22இன் 1 முதல் 6 வரை குறிப்பிடப்பட்டுள்ளவாறு, நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.00 மணி முதல் 11.00 மணி வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், காலை 11.00 மணி முதல் 11.30 மணி வரை நிலையியற் கட்டளை 27 (2) இன் கீழ் வினாக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் நாடாளுமன்ற தொடர்பாடல் பிரிவு அறிவித்துள்ளது.
பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை
பின்னர் காலை 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை “பட்டலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோத தடுப்பு மையங்கள் மற்றும் சித்திரவதை அறைகளை நிறுவிய மற்றும் பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” மீதான விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மே மாதத்தில் மற்றொரு நாளை இரண்டாவது நாளாக விவாதத்திற்கு பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
படலந்த ஆணைக்குழு அறிக்கை கடந்த 14 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற அமர்வுக்கு பின்னர், அடுத்த நாடாளுமன்ற அமர்வு மே மாதம் 8ஆம் திகதி இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
